நாடு முழுவதும் மாத ஊதியம் பெறுபவர் முதல் பலரும் பிற்கால தேவைக்காக வங்கிகளின் சேமிப்பு திட்டங்களை அணுகி வருகின்றனர். அந்த வகையில் பங்கு சந்தையில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் நல்ல ஒரு திட்டமாக இருப்பதாக பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கேற்ப கடந்த ஓராண்டுக்கான பங்குச்சந்தை நிலவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது கடந்த ஓராண்டில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளான நிஃப்டி PSU வங்கிகள் 119 சதவீதம் உயர்ந்து நல்ல லாபம் ஈட்டியுள்ளது. இதன் காரணமாக கடன் திட்டங்களில் முதலீடு செய்து வந்த பல முதலீட்டாளர்களும் வங்கிகளின் டெட் மியூச்சுவல் ஃபண்டுக்கு மாறி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி IDFC, Aditya Birla Sun Life, DSP, Kotak மற்றும் Axis ஆகிய வங்கிகளின் PSU டெட் ஃபண்ட் பாதுகாப்பான திட்டமாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹலோ.., ரிசர்வ் பேங்க் ஆஆ?? அந்த ரூ.2000…, இணையத்தை கலக்கும் மீம்ஸ் உள்ளே!!
இருந்தாலும் வரும் காலங்களில் பங்குச் சந்தை நிலவரங்கள் குறித்து யூகிக்க முடியாததால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்து சுய விருப்பத்தின் பேரிலே முதலீடு செய்யுங்கள்.