இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வந்தது. முதல் இரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது போட்டி வான்கடே மைதானத்தில் நேற்று (டிசம்பர் 10) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 126 ரன்கள் குவித்தது.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய ஷஃபாலி வர்மா சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மறுபக்கம் ஸ்மிருதி மந்தனா, தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தாலும் அதிரடியாக விளையாடி 48 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டியதால் 19 ஓவர் முடிவில் 127 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!