இந்தியாவில் பிச்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை 4.13 லட்சம் – முதலிடத்தில் மேற்கு வங்கம்!!

0

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கடந்த 2011ம் ஆண்டு முதல் 4,13,670 பிச்சைக்காரர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் அதிகமானோர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகிறது.

பிச்சை ஈடுபவர்களில் மேற்கு வங்கம் முதலிடம்

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் பல கோடி கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் 4.13 லட்சம் பேர் பிச்சை எடுக்கும் தொழிலை செய்து வருவதாக ஆய்வு ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் வசித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து நாடாளுமன்ற அவையில், மத்திய சமூக நீதி மந்திரி தாவர் சந்த் கெலாட் இன்று அளித்துள்ள பதிலில், இந்தியாவில் பிச்சை ஈடுப்பவர்களில் ஆண்கள் 2,21,673 பேரும், பெண்கள் 1,91,997 பேரும் உள்ளனர். இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையில் மேற்கு வங்க மாநிலம் 81,224 பேருடன் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 65,835 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 30,218 பேரும், பீகாரில் 29,723 பேரும், மத்திய பிரதேசத்தில் 28,695 பேரும், ராஜஸ்தானில் 25,853 பேரும் உள்ளனர்.

‘குக் வித் கிறுக்கு’ – கன்னடத்தில் ரீமேக்காகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி!!

மேலும் டெல்லியில் 2,187 பேரும், சண்டிகரில் 121 பேரும் பிச்சைக்காரர்களாக உள்ளனர். இந்தியாவை சுற்றியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் 2 பேரும், தாத்ரா நாகர் ஹாவேலியில் 19 பேரும், டாமன் மற்றும் டையூ பகுதியில் 22 பேரும், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் 56 பேரும் பிச்சைக்காரர்களாக உள்ளனர் என தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக ஆண்கள் 2.21 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here