இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா மீண்டும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ப்ரித்வி ஷா:
இந்தியாவில் தற்போது உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் மும்பை மற்றும் கர்நாடக அணி பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 322 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக கேப்டன் ப்ரித்வி ஷா இந்த போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவர் 122 பந்துகளை சந்தித்து 165 ரன்களை குவித்துள்ளார். அதில் 17 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் அடங்கும். இவர் ஏற்கனவே இந்த தொடரில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் 185 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது நினைவிற்கும். தற்போது மீண்டும் தனது அதிரடியை காட்டிய ப்ரித்வி ஷாவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகிறது.
பும்ராஹ்-சஞ்சனா கணேசன் திருமணம் – செல்போனுக்கு தடை!!
மேலும் இவருக்கு இந்திய அணியின் வீரர்கள் இர்பான் பதான் மற்றும் தினேஷ் கார்த்திக் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இவர் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடவுள்ளார். தற்போது இவரது சூப்பர் பார்மினால் டெல்லி அணி உற்சாகமடைந்துள்ளது.