ரயில்களில் இருக்கும் ஏசி 3- இ பொருளாதார வகுப்பு குறித்து ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
ஏசி 3- இ
இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் முக்கியமான சேவைகளில் ஒன்றாக இருந்து வருவது தான் ரயில் போக்குவரத்து. இந்த ரயில்வே துறை மூலம், பயணிகளுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக ஏசி ரயில்களில் தான் அரசாங்கம் அதிக லாபத்தை ஈட்டி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரயில்வே துறை கிட்டத்தட்ட 463 ரயில்களில் `ஏசி 3- இ’ என்ற புதிய பொருளாதார வகுப்பை அறிமுகப்படுத்தியது. இந்த `ஏசி 3- இ’ ரயில் பெட்டியில் 83 பேர் பயணிக்கலாம். மேலும் இந்த ரயிலின் பயண கட்டணங்கள் 6 முதல் 8 சதவீதம் வரையில் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட்., இதுக்கு தான் இவ்ளோ நாளா Wait பண்ணோம்.,பயனர்கள் குஷி!!
இந்நிலையில் `ஏசி 3- இ’ அடுக்கு பெட்டி குறித்து ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கூடிய விரைவில் `ஏசி 3- இ’ அடுக்கு பெட்டியை ரயிலில் இருந்து நீக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இனிமேல் ஆன்லைனில் `ஏசி 3- இ’ அடுக்கு பெட்டியை புக்கிங் செய்யும் வசதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இன்னும் நான்கு நாட்களில் ஏசி 3 அடுக்கு வகுப்புகளுடன் ஏசி 3- இ பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.