20,000 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரயில்வே துறை புதிய திட்டம்.!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கினால் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே தற்போது நாட்டையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளை மருத்துவமனையாக மாற்ற முன்வந்துள்ளது.

ரயில்வே துறை..!

நாடு முழுவதும் கொரோனா பாதித்துள்ள இந்தச் சூழ்நிலையில் அதிகரித்து வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் விதமாக சுமார் 20,000 ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்ற இந்தியன் ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சோனல் (Zonal) ரயில்துறைக்கு, இந்திய ரயில்வே துறை எழுதிய கடிதத்தில், 20,000 ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றும் திட்டத்தில் முதல் கட்டமாக 5000 பெட்டிகளை மாற்ற உத்தரவிட்டுள்ளது.

கொரோனவால் அடுத்தடுத்து உயிரிழக்கும் டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் – கண்காணிப்பை தீவிரப்படுத்திய மாநில அரசுகள்..!

மேலும் இப்பணிகளைத் துவங்கும் முன் ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை மருத்துவர்கள், பிராந்திய தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மற்றும் ஆயுஷ்மான் பார்த் ஆகியோரிடம் ஆலோசனை செய்து சரியான முறையில் திட்டமிடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 5 சோனல் ரயில்வே துறைகள் ஏற்கனவே மாதிரி வடிவத்தை உருவாக்கி, அதைப் பற்றிய முழு விபரத்தையும் அனைத்து சோனல் ரயில்வே துறைகளுக்கும் இந்தியன் ரயில்வே அனுப்பியுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here