தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்ட விடுமுறை தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது.
உயர்கல்வித்துறை சுற்றறிக்கை..!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விடுமுறையை ஏப்ரல் 14 வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ள தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இது குறித்த சுற்றறிக்கையும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டில் இருந்த படியே பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |