வெளிநாடு சென்றவர்கள் பட்டியலில் விஜய் பெயர் இருந்ததாக கருதி சுகாதாரத் துறை அதிகாரிகள் விஜய்யின் வீட்டிற்கு கொரோனா குறித்து ஆய்வு செய்வதற்காக திடீரென சென்றதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.
சுகாதாரத் துறை சோதனை..!
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை வெகு வேகமாக தாக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தவர்களின் வீடுகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அவர்கள் சேகரித்த பட்டியலில் விஜய்யின் பெயர் இருந்ததாக தெரிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லை.
விஜய் வீட்டில் விசாரிப்பு..!
அதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்னையிலுள்ள விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்குச் சென்று வீட்டில் யாருக்காவது வைரஸ் தொற்று உள்ளதா என விசாரித்துள்ளனர். ஆனால் விஜய் வீட்டில் கடந்த ஆறு மாதமாக யாரும் வெளிநாடு செல்லவில்லை என்று கூறப்பட்டதை அடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் நோட்டிஸ் ஒட்டாமல் திரும்பி சென்றதாக தெரிகிறது .
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |