இந்தியா முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களின் பொழுபோக்கிற்காக தொலைக்காட்சிகள் தங்களின் பிரபலமான பழைய சீரியல்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.
வருகிறார் சக்திமான்..!
தூர்தர்சன் சேனலில் 1980 களில் ஒளிபரப்பான ராமானந்த் சாகரின் ராமாயணம், பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் மற்றும் சக்திமான் தொடர்களை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதை ஏற்று கடந்த சனிக்கிழமை முதல் தூர்தர்ஷன் நேஷனல் தொலைக்காட்சியில் ராமாயணம் தொடர், தினமும் காலை 9 மணிமுதல் 10 மணிவரை ஒரு எபிஷோடும், இரவு 9 மணிமுதல் 10 மணிவரை இன்னொரு எபிஷோடும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து 8 ஆண்டுகள் 520 எபிசோடுகள் ஒளிபரப்பான சக்திமான் தொடரை மீண்டும் ஒளிபரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான நேரமும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிய வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |