மத்திய அரசு அறிவித்துள்ள ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டதிற்கு சிறந்த லோகோ வடிவமைத்து தருபவர்களுக்கு ரூ.50000 வெகுமதி வழங்கப்படும் என இந்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது. விருப்பமுள்ள நபர்கள் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற..கிளிக் செய்யுங்கள்..!
கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் நாட்டு மக்கள் அனைவரும் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் மத்திய அரசு இந்த போட்டியை பற்றி அறிவித்து இதற்கு வெகுமதியாக 50,000 ரூபாயையும் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே பங்கேற்கலாம்.
முதல் பரிசான ரூ.50000 தவிர மூன்று பங்கேற்பாளர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். மேலும் இவர்கள் அனைவருக்கும் இ-சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது myGov.in என்ற வலைத்தளத்திற்கு சென்று உங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்யவேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள் மே 31ஆம் தேதி. இந்த லோகோவின் வடிவம் JPEG, BMP அல்லது TIFF வகைகளில் இருக்க வேண்டும்.
இந்த லோகோ 600 dpi ரிசொல்யுஷனுடன் இருக்க வேண்டும். லோகோ இந்தி அல்லது ஆங்கில மொழியில் இருக்கலாம். லோகோ பற்றிய தகவல்கள் 100 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தற்போது இந்த செய்தி இணைய வாசிகளை குஷிப்படுத்தியுள்ளது.