இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலனோர் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களை திருமணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர். ஆனால் சமீபகாலமாக இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இடையே நடைபெறும் திருமணத்தில் பல்வேறு மோசடிகள் நடப்பதாக புகார் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பெண்கள் பலரும் கைவிடப்படக் கூடிய சூழல் அதிகரித்து வருவதாகவும் மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே நடைபெறும் திருமணங்களை கையாள்வதற்கான விரிவான சட்டத்தை, “குடியுரிமைச் சட்டம் 1955” கீழ் மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் இச்சட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கான திருமணங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
5வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.., இன்னும் இத்தனை பேர் பாதிப்பா?? போலீசார் அதிரடி!!!