தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா – நாளை 3வது T20I போட்டி

0
தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா - நாளை 3வது T20I போட்டி

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகளைக் கொண்ட T20I தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே முதல் போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் வென்றுள்ள இந்திய அணி நாளை புனேயில் நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

சிறப்பான பார்மில் இந்தியா

இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் நல்ல பார்மில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் விராட் கோஹ்லி, ராகுல், தவான் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர்.
கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய நவதீப் சைனி, சர்துல் தாகூர், குலதீப் யாதவ் மற்றும் பும்ராஹ் ஆகியோரின் பங்களிப்பு அடுத்த போட்டியிலும் அதிகமாக இருக்கும். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

மோசமான பேட்டிங்

இலங்கை அணி வீரர்களைப் பொறுத்தவரை குஷால் பெரேராவைத் தவிர யாரும் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. எனவே அந்த அணி பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.

இரு அணிகள் – இது வரை

மொத்த 20 ஓவர் போட்டிகள் – 18
இந்தியா வென்றவை – 12
இலங்கை வென்றவை – 5
முடிவில்லாதது – 1

மூன்றாவது போட்டியானது நாளை (ஜனவரி 10) இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here