ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசகு மேசவா. இவர் ஜப்பானின் சோசோ ஆன்லைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். பல கோடிகளுக்கு சொந்தக்காரரான அவர் அவ்வப்போது தனது வித்தியாசமான நடைமுறைகளால் உலகை ஆச்சர்யப்படுத்துவார்.
1000 பேருக்கு ரூ. 65.5 கோடி பரிசு
இவர் கடந்த புத்தாண்டு ஜனவரி 1 அன்று ட்விட்டரில் தான் செய்த ட்வீட்க்கு ரீட்வீட் செய்தவர்களில் 1000 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரூ. 6.55 லட்சம் வழங்குவதற்காக ரூ. 65.5 கோடி ரூபாயை அள்ளி வழங்கியுள்ளார். இது குறித்து கூறிய அவர் இந்த பணம் அவர்களை எவ்வளவு மகிழ்ச்சி அடைய செய்கிறது என ஆய்வு செய்யப்போவதாக கூறினார்.
நிலவுக்கு செல்லவுள்ளவர்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திலும் இவர் இணைந்து உள்ளார். பணம் மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறாக எல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அவ்வப்போது களஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.