T20 உலக கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் 2 ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் வலுவான அணியாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணி குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது T20 உலக கோப்பை காண இந்திய அணியை வரும் ஏப்ரல் கடைசி வாரத்தில் அணி தேர்வாளர்கள் தேர்வு செய்ய உள்ளனராம். குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாட்டை பார்த்து தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.