தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் தொகுதி அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த ஓ.பன்னீர்செல்வம், தனது சட்டைப் பையிலிருந்து ரூ.500 கட்டை பிரித்து, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தலா 2 நோட்டு என ரூ.1,000 வழங்கியதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன் பரப்புரைக்கு வந்தவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அடையாளம் தெரியாதவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இப்படியாக பல அரசியல் தலைவர்கள் கூட்டத்தில் பணப்பட்டுவாடா அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
Enewz Tamil டெலிக்ராம்
T20 உலகக் கோப்பை 2024.. இந்திய அணி வெளியீடு எப்போது?? முழு விவரம் உள்ளே!!