பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., அடுத்த ஆண்டு முதல் இத்திட்டம் தொடங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

0
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., அடுத்த ஆண்டு முதல் இத்திட்டம் தொடங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் இலவச சைக்கிள் திட்டம். தமிழகத்தை போன்றே இத்திட்டம் கர்நாடகாவிலும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2020-21 ஆம் கல்வியாண்டில் இருந்து இலவச சைக்கிள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க முதல்வரிடம் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை வைத்துள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் இலவச சைக்கிள் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here