இந்தியா தக்க வைத்த மகத்தான சாதனை…, சொந்த மண்ணில் தொடர்ந்து அசத்தல்!!

0
இந்தியா தக்க வைத்த மகத்தான சாதனை..., சொந்த மண்ணில் தொடர்ந்து அசத்தல்!!
இந்தியா தக்க வைத்த மகத்தான சாதனை..., சொந்த மண்ணில் தொடர்ந்து அசத்தல்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 400 ரன்கள் குவித்ததன் மூலம், ஒரு மகத்தான சாதனை தக்கவைத்துள்ளது.

IND vs AUS:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இந்த டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுக்க, இந்திய அணி கூடுதலாக 223 ரன்கள் அடித்து, மொத்தமாக 400 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளது. இதன் மூலம், இந்திய ஒரு மகத்தான சாதனையை தக்க வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, கடந்த 2015ம் ஆண்டு முதல், இந்தியாவில் விளையாடப்பட்ட டெஸ்ட் தொடர்களில், ஓர் இன்னிங்ஸில் அதிக முறை, 400 ரன்களுக்கு மேல் எடுத்த அணியாக இந்திய அணி திகழ்கிறது. 18 முறை இந்திய அணி இந்த சாதனை நிகழ்த்தி உள்ளது. இதில், இங்கிலாந்து அணி 4, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா ஒரு முறையும் 400 ரன்களுக்கு மேல் அடித்து, அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

IND vs AUS 1st Test: முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா!!

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ரோஹித் சர்மா குறித்து, ஹர்பஜன் சிங் சில கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, சுதந்திரமான மனநிலையுடன் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தி உள்ளார். இவரை போல, ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் அரைசதம் கடந்து, அணியின் ஸ்கோரை உயர்த்தி உள்ளனர் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here