இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி வெல்லும் பட்சத்தில், இந்த ஒரு சாதனை தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா:
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாடுவதற்கு திட்டமிட்டிருந்தது. இந்த இரு தொடருக்காக இந்தியா வந்துள்ள இலங்கை அணி, 2 டி20 போட்டிகளில், தலா ஒரு வெற்றி, தோல்வியை பெற்றுள்ளது. இந்த டி20 தொடரின் கடைசி போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடிய எந்த ஒரு டி20 தொடரையும் இழந்தது இல்லை. மேலும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணியும் இதுவரை தொடரை இழந்தது இல்லை என்பது குறிப்பிட தக்கது. இதனால், இன்று நடைபெற இருக்கும் 3வது டி20 போட்டியை இந்திய வென்று இந்த சாதனையை தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் புதிய தேர்வுக் குழுவை அறிவித்த பிசிசிஐ…, மீண்டும் சேத்தன் சர்மா தலைமையிலா??
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியாவை குறிப்பிட்டு, இவர் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வருவார் என கூறியுள்ளார். இதன் மூலம், ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் எதிர்கால டி20 கேப்டனாக இருப்பார் என்று வெளிநாட்டவர்களும் எதிர்பார்க்கின்றன என தெளிவாக தெரிகிறது.