பொங்கல் பண்டிகைகளில் தமிழர்களின் கலாச்சார போட்டியான ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் வருடந்தோறும் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் கோலாகலமாக கொண்டாடும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 17ம் தேதி நடைபெற உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்யக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஜன.10ம் தேதி டாஸ்மாக்கை இழுத்து மூட உத்தரவு.., மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!!
அதாவது https://madurai.nic.in/ இணையத்தளத்தில் சென்று மாடுபிடி வீரர்களின் பெயர் மற்றும் சுய விவரங்களை பூர்த்தி செய்ய அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் தடுப்பூசி சான்றிதழ், புகைப்படம் போன்றவற்றை பதிவேற்றம் செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.