இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு, 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள ஓர் இடத்திற்கு கடுமையாக போட்டி நடைபெற்று வருகிறது.
உலக கோப்பை:
ஐசிசி சார்பாக ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை தொடரானது, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2019ம் ஆண்டில் நடைபெற்ற இந்த உலக கோப்பை தொடரை இங்கிலாந்து அணி வென்றதன் மூலம், தற்போது நடப்பு சாம்பியனாக வலம் வருகிறது. இதனை தொடர்ந்து, நடப்பு வருடம் இந்தியாவில் இந்த ஒருநாள் உலக கோப்பை தொடர் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த ஒருநாள் உலக கோப்பை தொடர் அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்த உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள அணிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது. மேலும், இங்கிலாந்து (155), நியூசிலாந்து (150), இந்தியா (139), பங்களாதேஷ் (130), பாகிஸ்தான் (130), ஆஸ்திரேலியா (120), மற்றும் ஆப்கானிஸ்தான் (115) புள்ளிகளுடன் முதல் 7 இடத்தை பெற்று தகுதி பெற்றுள்ளன.
RCB அணியில் இணைந்த ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், விராட் கோலி…, இனி அதிரடி தா காட்ட போறாங்க!!
13 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த புள்ளிப் பட்டியலில், முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளே நேரடியாக உலக கோப்பைக்கு தகுதி பெறும். தற்போது வரை 7 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி 88 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா (78), இலங்கை (77), அயர்லாந்து (68), ஜிம்பாப்வே (55), நெதர்லாந்து (35) புள்ளிகளுடன் அடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.