துக்கத்தில் இருந்து மீண்டு வந்த மீனா அந்த கதைக்கு ஒத்துக்கொண்டாரா?? லீக்கான அப்டேட்!!

0
துக்கத்தில் இருந்து மீண்டு வந்த மீனா அந்த கதைக்கு ஒத்துக்கொண்டாரா?? லீக்கான அப்டேட்!!
துக்கத்தில் இருந்து மீண்டு வந்த மீனா அந்த கதைக்கு ஒத்துக்கொண்டாரா?? லீக்கான அப்டேட்!!

தென்னிந்திய சினிமா துறையில் 90களில் வெளியான படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ஒரு காலகட்டத்திற்கு பிறகு கோலிவுட் திரையில் உள்ள பல முக்கிய நட்சத்திரங்களுடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த ‘எஜமான்’, ”அவ்வை சண்முகி” போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமைந்து பல விருதுகளை இவருக்கு பெற்று தந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படி சினிமா துறையில் புகழின் உச்சியில் ஜொலித்து வந்த இவர் திருமணம் முடித்து கணவர் குழந்தைகளுடன் தனது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். மேலும் கடந்த வருடம் இவரது கணவர் வித்யாசாகர் மறைந்த நிலையில் தற்போது அந்த துக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். இந்நிலையில் இவர் தனது கெரியரில் கவனத்தை செலுத்தும் வகையில், இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

இதையும் விட்டுவைக்கலயா.., அந்த விஷயத்திலும் தளபதி விஜய்யை Follow செய்யும் சிவகார்த்திகேயன்.., SK 21 பட லேட்டஸ்ட் அப்டேட்!!!

இந்த நேரத்தில் இவரிடம் இயக்குனர் ஒருவர், பழனி முருகனின் கதையை மையமாக கொண்ட படத்தின் கதையை கூறியுள்ளார். இந்த கதை மீனாவை கவர்ந்து விட்டதால், இதில் நடிக்க இயக்குனருக்கு மீனா ஓகே சொல்லியுள்ளார். இதன் மூலம் மீனா மீண்டும் கோலிவுட் திரைக்கு ஆன்மீக கதையின் மூலம் என்ட்ரி கொடுக்க உள்ளார். மேலும் இப்படம் குறித்து தகவல்கள் இன்னும் சில நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here