ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி உள்ள நிலையில், RCB அணி நடத்தும் அன்பாக்ஸ் நிகழ்ச்சிக்காக நட்சத்திர வீரர்களான ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் அணியில் இணைந்துள்ளார்.
RCB அணி:
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இந்த தொடரில் பங்குபெற உள்ள 10 அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர். மேலும், ஒவ்வொரு அணியும் தங்களது, புது ஜெர்சியையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதில், பெங்களூரின் RCB அணியானது, மார்ச் 26 (நாளை) முன்னாள் நட்சத்திர வீரர்களான ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் உள்ளிட்டோர் அன்பாக்ஸ் நிகழ்ச்சி மூலம் தங்களது ஜெர்சியை அறிமுகப்படுத்த உள்ளன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பிரபல பாடகர்களான ஜேசன் டெருலோ, சோனு நிகம் உள்ளிட்ட பலர் இந்த அன்பாக்ஸ் நிகழ்ச்சியை அலங்கரிக்க உள்ளனர். இதற்காக, ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் பெங்களூருக்கு வந்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, RCB அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அணியில் இணைந்துள்ளார். இதனை, RCB அணி தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஐபிஎல்லிருந்து விலக இருக்கும் CSK & LSG வீரர்கள்…, வெளியான நியூ அப்டேட்!!
RCB அணியானது, ஐபிஎல்லில் இதுவரை நடைபெற்றுள்ள 15 சீசன்களில் ஒரு முறை கூட பதக்கத்தை வெல்லவில்லை. ஆனால், அதிக முறை இறுதிப்போட்டிக்கு சென்ற அணியாகவும், மற்ற அணிகளுக்கு நெருக்கடி கொடுக்க கூடிய அணியாகவும் திகழ்ந்து வந்துள்ளது. இந்த முறை, பதக்கம் வெல்லாத குறையை RCB அணி தீர்த்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The wait is over and Virat Kohli is in Bengaluru! ?
Happy HOMECOMING, KING! ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 @imVkohli pic.twitter.com/13rZ1oHWfz
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 25, 2023