இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா:
இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு..!
இந்தியாவில் இதுவரை 37,336 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் உயிர் இழப்புகளின் எண்ணிக்கை 1,218 ஆக அதிகரித்து உள்ளது. ஆறுதல் அளிக்கும் செய்தியாக 9,951 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். தற்போது 26,167 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநில வாரியாக ரிப்போர்ட்:
தமிழகத்தில் பச்சை, ஆரஞ்சு & சிவப்பு நிற மாவட்டங்கள் பட்டியல் – எங்கெங்கு ஊரடங்கு தளர்த்தப்படும்..?
இந்தியாவில் மஹாராஸ்டிரா மாநிலம் தான் கொரோனவால் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 11,505 பேர் அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 485 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். அதற்கு அடுத்த படியாக குஜராத்தில் 4721 பேருக்கும், டெல்லியில் 3738 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 2719 பேருக்கும், ராஜஸ்தானில் 2666 பேருக்கும், தமிழகத்தில் 2526 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |