24 மணிநேரத்தில் 37 பேர் பலி – இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா பாதிப்பு..!

0
Corona Death
Corona Death

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியை கடுமையாக பின்பற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி உயிரிழப்புகளும் அதிகரித்தபடி உள்ளது.

இந்தியாவில் கொரோனா:

  • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 12,380 பேர்
  • இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 414 பேர்
  • வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 1512 பேர்

இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்ட மாநிலமாக உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் டெல்லி, தமிழ்நாடு மாநிலங்கள் உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்ட மாநிலமான கேரளாவில் தற்போது அதன் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட 387 பேரில் 218 பேர் குணமடைந்து உள்ளனர். அதுமட்டுமின்றி இதுவரை 3 பேர் மட்டுமே உயிரிழந்து உள்ளனர்.

மாநில வாரியாக பாதிக்கப்பட்டோர் விபரம்:

  1. மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 2916 பேர் பாதிக்கப்பட்டும் 187 பேர் உயிர் இழந்து உள்ளனர். அங்கு 295 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
  2. டெல்லியில் இதுவரை 1578 பேர் பாதிக்கப்பட்டும் 32 பேர் உயிர் இழந்து உள்ளனர். அங்கு 25 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
  3. தமிழகக்தில் இதுவரை 1242 பேர் பாதிக்கப்பட்டும் 14 பேர் உயிர் இழந்து உள்ளனர். அங்கு 117 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
  4. ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 1023 பேர் பாதிக்கப்பட்டும் 3 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
  5. மத்தியப்பிரதேசத்தில் இதுவரை 986 பேர் பாதிக்கப்பட்டும் 53 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
  6. உத்திரப்பிரதேசத்தில் இதுவரை 735 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here