இந்தியாவில் 40 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 86,432 பேருக்கு தொற்று உறுதி!!

0

இந்தியாவில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவு 86,432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கொரோனா தொற்று:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் பொழுது பல்வேறு தளர்வுகள் வழங்கப்படுகின்றன. இதனால் தொற்று எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக தினசரி 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோர்க்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

coronavirus-india
coronavirus-india

பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி, இ-பாஸ் ரத்து உள்ளிட்ட தளர்வுகள் தான் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் எதிரொலித்து உள்ளது. இதனால் வரலாறு காணாத அளவு ஜிடிபி சரிவடைந்து உள்ளது. மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு முறையாக செயல்படுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 86,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,23,179 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஒரே நாளில் 1,089 பேர் பலியாகி உள்ளதால், உயிரிழப்புகள் எண்ணிக்கை 69,561 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 31,07,223 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,46,395 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here