இந்தியாவில் தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்ட பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த ஐந்து மாநிலங்களில் நடப்பாண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 9) மதியம் 12 மணி அளவில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இடையே ஆலோசனை கூட்டம் நடந்தது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி,
- மிசோரமில் நவம்பர் 7 ஆம் தேதியும்,
- சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகவும்,
- மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும்,
- ராஜஸ்தானில் 23ஆம் தேதியும்,
- தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் சட்டமன்ற தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.