இலங்கைக்கு எதிராக இன்று நடைபெற இருக்கும் 3 வது டி20யில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இந்த 2 மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs SL:
இந்திய அணி இன்று இலங்கை அணிக்கு எதிராக 3வது மற்றும் கடைசி டி20 போட்டியை ராஜ்கோட் மைதானத்தில் விளையாட உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 2 டி20 போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டி தொடரை யார் கைப்பற்ற போகிறார் என்ற எதிர்பார்ப்பே அதிகம் உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதில், இந்திய அணியானது, தனது சொந்த மண்ணில் இந்த ஆண்டின் முதல் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்றும் எண்ணும். இதனால், கடந்த போட்டியில் இந்திய அணி செய்த தவறுகளை வைத்தே, பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், 2வது டி20 யில் களமிறங்கிய அர்ஷ்தீப் சிங் அதிக நோ பால் வீசியதுடன், ரன்களையும் எதிரணிக்கு அள்ளி கொடுத்தால், இவருக்கு பதில் ஹர்ஷல் படேல் களமிறங்க கூடும்.
துபாய் ஓபனுடன் சானியா மிர்சா ஓய்வு பெற திட்டமா?? வெளியான அப்டேட்!!
ஹர்ஷல் படேல், இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில், 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த இரு போட்டிகளிலும், 7, 5 என ஓர் இலக்க ரன்களில் வெளியேறிய சுப்மன் கில் இன்றைய போட்டியில், பார்மை மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று போட்டி நடைபெற இருக்கும் மைதானமானது பேட்டிங்க்கு அதிக சாதகமானது என்பதால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனாக ருதுராஜ் கெய்க்வாட் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.