இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ள முதல் ஒருநாள் போட்டியை பார்ப்பதற்காக அசாம் அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IND vs SL:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட இரு தொடர்களை விளையாட திட்டமிட்டிருந்தது. இதில், நேற்று முன் தினம் முடித்த டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற வெற்றி கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதன் மூலம், தனது சொந்த மண்ணில், தொடர்ந்து 4 ஆண்டுகளாக டி20 தொடரை இழக்காமல் சாதனையை தக்க வைத்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியும், இதுவரை ஒரு தொடரையும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி நாளை முதல் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை விளையாட தயாராகி வருகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், டி20 போட்டியில் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் மற்றும் வேக புயல் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸுடன் 12 வருட பயணத்தை நிறைவு செய்த ஹிட் மேன்…, வைரலாகும் வீடியோ பதிவு!!
இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது, நாளை அசாம் மாநிலத்தில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மதியம் 1.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு தனது சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடுவதை பார்பதற்காக அசாம் அரசு கம்ரூப் பெருநகர மாவட்டத்தில் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலானது அசாம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.