விரைவில் வரவுள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்வதற்காக, பள்ளிகளில் கூடுதல் வகுப்புகளை நடத்த மாநில கல்வித்துறை தயாராகி வருகிறது.
கூடுதல் வகுப்புகள் :
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ஏற்கனவே இதற்கான ஹால் டிக்கெட் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதம் இவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புவனேஸ்வர் நகரில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக, கூடுதல் வகுப்புகளை நடத்த பள்ளிகள் ஏற்பாடு செய்து வருகின்றன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது குறித்து பேசிய புவனேஷ்வர் நகர கேந்திரிய வித்யாலயா பள்ளியின் மூத்த ஆசிரியை, கடந்த 2 ஆண்டுகளாக கோவிட்-19 காலத்தில் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது. ஒரு வகுப்பில் 20% க்கும் குறைவான மாணவர்கள், மெல்ல கற்கும் நிலையை அடைந்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது, வெறும் 40 நிமிட வகுப்பு மட்டும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதாது.
டெல்லியில் தொடரும் பனிப்பொழிவு.., ஜன.15 வரை பள்ளிகள் மூட உத்தரவு!!
இதனால் கூடுதல் வகுப்புகளை நடத்த உள்ளதாக தெரிவித்தார். மாணவர்களை மீண்டும், கொரோனாவுக்கு முந்தைய கற்றல் நிலைக்கு திருப்ப வேண்டும் எனவும், அப்போதுதான் அவர்கள் பொதுத் தேர்வை எழுத ஆயத்தமாவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.