டெல்லியில் தொடரும் பனிப்பொழிவு.., ஜன.15 வரை பள்ளிகள் மூட உத்தரவு!!

0
டெல்லியில் தொடரும் பனிப்பொழிவு.., ஜன.15 வரை பள்ளிகள் மூட உத்தரவு!!
டெல்லியில் தொடரும் பனிப்பொழிவு.., ஜன.15 வரை பள்ளிகள் மூட உத்தரவு!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு இப்போது பள்ளி, கல்லூரிகள் வழக்கமான முறையில் நடைபெற்று வருகிறது. மேலும் பொது தேர்வுகளும் நெருங்க உள்ளதால் அதற்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். ஆனாலும் கனமழை, புயல், குளிர் போன்ற சில காலநிலை மாற்றங்களால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு மத்திய மாநில அரசு விடுமுறை அளித்து வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து தற்போது வட மாநிலங்களில் கடும் மூடுபனி நிலவி வருவதால் மக்களின் இயல்பான வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1.9 செல்சியஸ் சரிந்துள்ளது. இதனால் போக்குவரத்து இடையூறு, ரயில் ரத்து என மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மெட்ரோ ரயில் பணி.., இந்த இடங்களுக்கு போக்குவரத்து மாற்றம்.., காவல்துறை அறிவிப்பு!!!

மேலும் கடும் மூடுபனியால் காற்று மாசுபாடு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 15ம் தேதி வரை விடுமுறை வழங்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here