இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையே மூன்று போட்டிகள் T20 தொடரின் முதல் போட்டி இன்று (ஜனவரி 27) ராஞ்சியில் நடைபெறுகிறது. ஏற்கனவே ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளதால் T20 தொடரை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்திய அணி அனுபவம் இல்லாத இளம் வீரர்களுடன் களமிறங்க உள்ளதால் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்வது என்பது சவாலானதாகவே இருக்கும். மேலும் ரோஹித் தனது தலைமை பண்பை நிலைநிறுத்தி உள்ளதால் ஹர்திக் பாண்டியா “கேப்டன்ஷியில்” நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
T20 யில் ரன் வேட்டையை தொடரும் சூர்யகுமார்…, நியூசிலாந்துக்கு எதிராக ஜொலிப்பாரா??
இதனால் டாஸ் தேர்வு, பீல்டர் செட்டிங், பேட்டிங் பார்ம் என எதாவது ஒரு இடத்தில் சொதப்பினாலும் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் தான் நம்பிக்கையாகி விடும். முன்னாள் கேப்டன் தல தோனியும் கூட நேற்று ஹர்திக் பாண்டியாவுக்கு அறிவுரைகளை கூறியிருக்கிறார். மேலும் U19 மகளிர் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.