இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் விறுவிறுப்பான முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் 2ம் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால் இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சால் நியூசிலாந்து அணி வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினர். இதில் பொறுமையான ஆட்டத்தை கையாண்ட கிளீன் பிலிப்ஸும் 36 ரன்னுடன் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி 108 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த போட்டியில் முகமது ஷமி பவர் பிளே ஓவரில் நான்கு ஓவர்களை வீசி 5 ரன்களை மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். மேலும் நியூசிலாந்து வீரர்களை கலங்கடித்த ஷமி 20 டாட் பந்துகளை வீசியுள்ளார். இதைத்தொடர்ந்து 109 ரன் எடுத்து தொடரை வெல்ல இந்திய அணி களமிறங்கியுள்ளது.