10, 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. கிட்டத்தட்ட 19 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் 7,200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாணவர்கள் விரைவாக தேர்வு மையங்களுக்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது 2019ம் ஆண்டு முதல் தேர்வெழுதும் மையங்கள் மாணவர்களின் பள்ளியில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை 7 கி.மீ. தொலைவுக்குள் தேர்வு மையங்கள் அமைக்கவுள்ளதால் கூடுதலாக 100 பள்ளிகளை தேர்ந்தெடுத்துள்ளதாக தேர்வு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., புதிய திட்டத்திற்கு குவியும் ஆதரவு! ரூ.1.29 கோடி வழங்கி அதிரடி!!
மேலும் இந்த வசதி மலைப்பகுதி பள்ளிகளிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் மாணவர்கள் பல கி.மீ. பயணம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பள்ளி மாணவ மாணவிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.