இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியிலிருந்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
IND vs NZ:
இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப் பட்டிருந்தது. இதையடுத்து, மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வெல்லும் அணியே தொடரை கைப்பற்ற முடியும். இதனால், 2வது டி20 போட்டியில், இரு அணிகளும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
நேற்று நடைபெற்ற இந்த 2வது போட்டியில், சூர்யகுமாரின் சதம் மற்றும் தீபக் ஹூடாவின் அசத்தலான பவுலிங் உள்ளிட்டவற்றால் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, இந்த இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெற இருக்கிறது.
புரோ கபடி: பெங்களூரு புல்ஸை வீழ்த்திய புனேரி பல்டன்…, புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!
இந்த போட்டியில் இருந்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசிய, நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர், தற்போது, கேன் வில்லியம்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மீண்டும் அணியில் இணைவார் என கூறியுள்ளார். வில்லியம்சன் விலகியதை அடுத்து, நாளை போட்டியில் டிம் சவுத்தி கேப்டனாக இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.