நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் விஜய்:
கலைத்துறையில் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் தளபதி விஜய். தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தளபதி பாடிய ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து வருகிறது. மேலும் இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தளபதி விஜய் படம் வெளியே வந்தால் போதும், விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை கையில் பிடிக்கவே முடியாது. அதாவது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உதவ ஆரம்பித்து விடுவார்கள். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இனிமேல் வரும் காலங்களில் விஜய் ரசிகர்களை சந்தித்து பேசுவார்.
அப்துலை தோற்கடித்த சந்தியா.., தேர்தலில் பின் வாங்க நினைக்கும் சரவணன்.., பரபரப்புடன் ராஜா ராணி 2!!
மேலும் ரசிகர்கள் தங்கள் ஊதிய பணத்தில் 1% ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள். கடன் வாங்கி மக்களுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று விஜய் உத்தரவிட்டுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மற்ற மாவட்ட நிர்வாகிகளையும் அடுத்தடுத்து சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.