நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து, நாளை நடைபெற இருக்கும் 2வது போட்டியில் தரமான பிளேயிங் லெவனுடன் களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
IND vs NZ:
தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின், முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 306 ரன்களை துரத்தி கேன் வில்லியம்சன்(94*) மற்றும் டாம் லதாம் (145*) அதிரடியால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.
பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா விலகல்?? மாற்று வீரரை தேர்வு செய்த பிசிசிஐ ??
இதனால், நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, 2 வது ஒருநாள் போட்டி நாளை செடான் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில், இந்தியா வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். எனவே, நாளை நடைபெற இருக்கும் போட்டியில், இந்திய அணி ஆரம்பம் முதலே வேகம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்திய அணியை பொறுத்த வரையில், தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் கடந்த போட்டியை போல அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தொடர்ந்து, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் இவர்களும் பேட்டிங்கு கை கொடுக்க கூடும். பந்து வீச்சில், உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் ஆகியோர் எதிரணியின் பேட்டிங்கு சவால் விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.