இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆடடத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா இரட்டை சதத்தை தவறவிட்டு ஆட்டத்தை இழந்தார்.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியின் தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டி இன்று காலை சென்னையில் வைத்து துவங்கியது, டாஸ் வென்று முதலில் இந்தியா அணி பேட்டிங் செய்தது. இந்தியா அணியின் கில் 0 மற்றும் கோஹ்லி 0 ஏமாற்றினார். புஜாரா 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்பு துவக்க ஆட்டக்காரர் ரோஹித் மற்றும் ரஹானே இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். முதல் போட்டியில் இந்த இரு வீரர்களும் சொதப்பிய நிலையில் இந்த போட்டியில் இந்தியா அணி ரன் குவிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இவரை தொடர்ந்து ரஹானே தனது அரை சதத்தை பதிவு செய்தார். மேலும் அதிரடி காட்டிய ரோஹித் 150 ரன்களை கடந்து அசத்தினார்.
#INDvsENG 2வது டெஸ்டில் ரோஹித் 150, ரஹானே அரைசதம் – வலுவான நிலையில் இந்திய அணி!!
இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து அணியினர் திணறி வந்தனர். அதன்பின்பு ரோஹித் 161 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர் இரட்டை சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இவரது ஆட்டமிழப்பு அனைவருக்கும் ஏமாற்றத்தை தந்தது. இவரை தொடர்ந்து ரஹானே 67 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தற்போது களத்தில் பாண்ட் மற்றும் அஸ்வின் விளையாடி வருகிறார்கள்.
லைவ் ஸ்கோர்:
இந்தியா – 258/5
பாண்ட் – 5*
அஸ்வின் – 4*