பட்டோடி டிராபியில், இதுவரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் முடிந்துள்ளது. இதில், இந்திய அணியானது 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்வதில் முன்னிலை வகிக்கிறது. இந்த டிராபியில் இந்திய அணி, நாளை (மார்ச் 7) இங்கிலாந்து அணிக்கு எதிராக 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதில், இந்திய அணி வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் உள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்…, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
இதனால், இந்த 5 வது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இதற்கு, இந்த டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் மைதானமானது கைகொடுக்குமா என்பதே பின்வருமாறு காணலாம். தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் மைதானமானது, சுழற் பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக உள்ளது. மேலும், பேட்டிங்கிங்கும் அதிக அளவில் கை கொடுக்க கூடியதாக உள்ளது. இந்திய அணியை பொறுத்த வரையில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் அதிக வெற்றிகளை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.