பங்களாதேஷிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs BAN:
இந்திய அணி நியூசிலாந்து தொடருக்கு பிறகு பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு, இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களை விளையாட இருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டி நாளை பங்களாதேஷின் ஷேர்-இ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், ரோஹித், விராட் கோஹ்லி உள்ளிட்ட சீனியர் வீரர்களும் களமிறங்க தயாராகி வருகின்றன. சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்று பங்களாதேஷ் அணியும்போராடும். இதனால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டியில், இந்திய அணியை பொறுத்த வரையில், ரோஹித்துடன் கே எல் ராகுல் தவான் இவர்களில் யார் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிக அளவில் எழுந்து வருகின்றன. மேலும், முன்னணி பந்து வீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக விலகி உள்ளதால், இவருக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட உம்ரான் மாலிக் பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா என்ற கேள்வியும் எழுந்து வருகின்றன. இதனால், இந்திய அணிக்கு கீழ்கண்டவர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்திய நம்பர் 1 வீரர் மீது FIR பதிவு…, குற்றம் உறுதியானால் சிக்கலில் மாட்டுவார்!!
பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா, கே எல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், தீபக் சாஹர்.