இந்தியாவின் இளம் நட்சத்திர பேட்மிண்டன் வீரராக லக்ஷயா சென் வலம் வருகிறார். இவர், இந்த வருடத்தில் காமன்வெல்த், தாமஸ் கோப்பை என பங்கு பெற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு உலக பேட்மிண்டன் தரவரிசையில் 6 வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மேலும், சமீபத்தில் தான் அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பல சாதனைகளுக்கு சொந்தகாரரான இவர் மீது மோசடி வழக்கு ஒன்று பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 2010ம் ஆண்டு முதல் வயது பிரிவு போட்டிகளில் விளையாடுவதற்கு போலி சான்றிதழ் வாங்கி ஏமாற்றி உள்ளதாக ஒருவர் போலீஸில் தாக்கல் செய்துள்ளார்.
IND vs AUS: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்தியா…, தொடரை கைப்பற்றி அசத்தல்!!
இந்த தாக்கலில், போலி சான்றிதழ் பெற உறுதுணையாக இருந்த லக்ஷயா சென், இவரது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குற்றம் நிரூப்பிக்கப்பட்டால், பல எதிர்ப்புகளுக்கு லக்ஷயா சென் உள்ளாக கூடுவார்.