பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினேஷ் கார்த்திக்:
பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணியானது இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்த தொடரானது, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு முக்கிய போட்டியாக உள்ளது. இதனால், இந்திய அணி இந்த தொடரில் வெற்றி பெரும் முனைப்பில் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில், இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. அதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் மீண்டும் அறிமுகமாக உள்ளேன் என்ற விதத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால், ரசிகர்கள், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இல்லாத காரணத்தால், அணியில் சேர்க்கப்பட்டுள்ளாரா என்ற குழப்பத்தில் இருந்தனர். ஆனால், இவர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக செயல்பட உள்ளவராக தகவல் வெளியாகி உள்ளது.
Made my Test debut in India against Australia…
Well…It's happening again! ☺️ #Excited #INDvAUS— DK (@DineshKarthik) February 2, 2023