பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
IND vs AUS:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 12, சுப்மன் கில் 21, புஜாரா 1, ஜடேஜா 4 மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 0 என அடுத்தடுத்து வெளியேற, 45 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்தது. இதனால், விராட் கோலியுடன் இணைந்த, ஸ்ரீகர் பரத் நிதானமாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனாலும், ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், விராட் கோலி 22, ஸ்ரீகர் பரத் 17, அஸ்வின் 3, உமேஷ் யாதவ் 17, முகமது சிராஜ் 0 என பெவிலியன் திரும்பினார். இதன் விளைவால், இந்திய அணி 109 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அக்சார் பட்டேல் மட்டும் 12 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில், டிராவிஸ் ஹெட் 9 ரன்களில் வெளியேற, 2 வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஜோடி 96 ரன்களை சேர்த்தது.
இவர்களில், உஸ்மான் கவாஜா 60, மார்னஸ் லாபுசாக்னே 31 ரன்களில் ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுக்க, ஸ்டீவ் ஸ்மித்தும் 26 ரன்களில் வீழ்ந்தார். இதனால், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்து, 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 7*, கேமரூன் கிரீன் 6* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் இதுவரை வீழ்ந்த 4 விக்கெட்டையும் ஜடேஜா தான் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.