இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, நேற்று (நவம்பர் 26) 2வது போட்டியை திருவனந்தபுரத்தில் விளையாடியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் (53) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (58) களமிறங்கி அசத்தினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர்களை தொடர்ந்து இஷான் கிஷன் 52, சூர்யகுமார் யாதவ் 19 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் குவித்திருந்தது. ரிங்கு சிங் (31*) மற்றும் திலக் வர்மா (7*) ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம், இந்திய அணி தொடரை வெல்ல 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை., வெளியான அதிரடி அறிவிப்பு!!!