தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் ஆகி வருவதால், அதற்கேற்ப சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய் பாதிப்புகளுக்கும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய் தொற்று கூடுதலாக பரவாமல் இருக்க பொது இடங்களில் முகக்கவசம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த நிலையில் மதுரையில் நேற்று (நவம்பர் 26) ஒரு நாள் மட்டும் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த ஒரு மாதத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளதாக அதிர்ச்சி தகவல் குறிப்பிட்டுள்ளனர்.
IND vs AUS 2nd T20: தோல்வியின் பிடியில் ஆஸ்திரேலியா…, அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா!!