இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில், இந்திய அணி தனது 2வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, ரஹ்மானுல்லா குர்பாஸ் 21, இப்ராஹிம் சத்ரான் 22, ரஹ்மத் ஷா 16 என சீரான இடைவெளியில் வெளியேற, கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (80) மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் (62) அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களும் ஒரு கட்டத்தில் வெளியேற, ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பாக பும்ரா 4, ஹர்திக் பாண்டியா 2, ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து, 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது.