#INDvsENG டெஸ்ட் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவு – இங்கிலாந்து அணி 555 ரன்களை குவிப்பு!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். போட்டியில் இரண்டாவது நாள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 2ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி முதற்கட்டமாக டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. நேற்று சென்னை மைதானத்தில் வைத்து இந்த போட்டி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா அணியின் பந்து வீச்சை இங்கிலாந்து அணியினர் சிறப்பான முறையில் எதிர்கொண்டு விளையாடி வந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் துவக்க ஆட்டக்காரர்கள் பர்ன்ஸ் மற்றும் சிப்லே சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பர்ன்ஸ் 33 ரன்கள், சிப்லே 87 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அதன் பின்பு களமிறங்கிய லாரன்ஸ் 0 ஏமாற்றினார். போட்டியின் முதல் நாள் முடிவில் ரூட் சதமடித்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த்தார். இரண்டாம் நாள் போட்டி இன்று துவங்கியது. இன்றைய போட்டியில் கேப்டன் ரூட்டுடன் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இந்தியா அணியின் பந்துவீச்சை சிறப்பான முறையில் எதிர்கொண்டு வந்தனர். இந்த போட்டியில் சென்னை ஆடுகளம் இந்தியா அணியின் பௌலர்களுக்கு சாதகமாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

555 ரன்கள் குவிப்பு:

ஏனென்றால் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்த இந்தியா அணியின் பௌலர்கள் திணறி வந்தனர். சிறப்பாக ஆடிய ஸ்டோக்ஸ் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். இவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 82 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரூட் இரட்டை சதத்தை அடித்து அசத்தினார். மேலும் 100 வது போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ரூட்.

குக் வித் கோமாளி அஸ்வினை பற்றி மனம் திறக்கும் சுனிதா – இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

218 ரன்கள் எடுத்த நிலையில் ரூட், நதீம் சூழலில் சிக்கினார். அதன்பின்பு வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிய அளவில் சொற்பிக்கவில்லை. போப் 34, பட்லர் 30, ஆர்ச்சர் 0 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது களத்தில் பெஸ் 28 மற்றும் லீச் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா அணி தரப்பில் அஸ்வின், பும்ராஹ், இஷாந்த் மற்றும் நதீம் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். நாளைய போட்டியில் இங்கிலாந்து அணி டிக்ளர் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் ஸ்கோர்:

இங்கிலாந்து – 555/8

பெஸ் – 28*
லீச் – 6*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here