லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்துடன் மத்திய அரசு கலந்தாலோசித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தபால் வாக்குகள் மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 80 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அப்போது 2 முதல் 3 % வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்ததால் மத்திய அரசு இப்போது வயது வரம்பை உயர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளது. இதன் முடிவில் இப்போது தபால் வாக்கு மூலம் முதியவர்கள் வாக்கு அளிப்பதற்கான வயது வரம்பை 85 ஆக உயர்த்தியுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.