தமிழ்நாடு அரசு அலுவலகங்களில், பொது மக்களுக்கான சேவைகளை தெளிவாக வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பத்திர பதிவுக்காக வருபவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் எண் வரிசைகளில் குழப்பம் ஏற்படுவதாக பலரும் புகார் தெரிவித்து வந்தனர்.
தமிழக பள்ளி ஆசிரியர்களே.., சம வேலைக்கு சம ஊதியம்.., பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு!!!
இதையடுத்து டோக்கன் எண், விண்ணப்பதாரர் பெயர், வரிசை உள்ளிட்ட விவரங்களை தெளிவாக காட்சிப்படுத்தும் வகையில், புதிய வசதியை பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நேற்று (மார்ச் 1) சென்னையில் தொடங்கி வைத்தார். இதன்மூலம் காத்திருப்போரின் விவரங்கள் காட்சி படுத்துவது மட்டுமல்லாமல், குரல் வழி அறிவிப்பும் தெரியப்படுத்தப்படும். இந்த புதிய வசதிக்காக ரூ.3.64 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.