டாஸ்மாக் பார்களில் போலி மதுபானம் விற்பனை.. அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

0

தமிழகத்தை பொறுத்த வரை அரசுக்கு வருவாய் வரும் முக்கியமான காரணிகளில் டாஸ்மாக் கடைகளும் ஒன்று. இந்த மதுபான கடைகளின் வாயிலாக, விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அரசுக்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும். தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளோடு சேர்த்து பார்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் பார்களில் போலி மது விற்பனை அரங்கேறிய சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா தேர்தல்.., தபால் மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பு உயர்வு.., மத்திய அரசு அறிவிப்பு!!!

அதாவது தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர், அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக மத்திய மண்டல காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சோடா பாட்டில்களுடன் போலி மதுபானங்களை இறக்கிக் கொண்டிருந்த வாகன ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்பொழுது அவரும் அவரது 3 நண்பர்களும் சேர்ந்து போலி மதுபானம் தயாரித்ததாக ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here