சமீப காலமாக தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 18) அதிகாலை முதலே சென்னையின் வேப்பேரி, வில்லிவாக்கம், பூக்கடை, மாதவரம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
அந்தவகையில் சவுகார்பேட்டை ஸ்டார்ட்டன் முத்தையா முதலி தெருவில் தொழில் அதிபர் ஒருவர் வீட்டிலும், மாதவரம் நடராஜன் நகரில் உள்ள தனியார் குடோனிலும் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இப்படியாக சென்னையில் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்பான இடங்களிலும் வருமானவரி சோதனை நடப்பதால், இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.